நிலத்தடி நீருக்கு வரி கட்டணும்
ஆளத்தெரியாதவன் ஆளும் கட்சியானால்
இது மட்டுமல்ல இதற்கு மேலும் நடக்கும்.
இந்தியாவின் வல்லரசு திட்டமாம்..உங்க திட்டதுல தீயவைக்க...
அப்படியே மூக்குலையும் ஒரு மீட்டர் மாட்டிவிட்டுடுங்கடா... எவ்வளவு காற்ற சுவாசிக்கிறானோ அவ்வளவுக்கும் வரிபோடுங்க....
நியாயமா கட்டவேண்டிய வரிகளை கட்டாமல் ஆயிரம் குறுக்குவழிகளில் தப்பிச்சிட்டு இருக்கும் பெரிய பெரிய கோடிஸ்வரன்கள் கிட்ட அதை கண்டுபுடிச்சி வாங்க துப்பில்ல....
கோடி கோடியா கருப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கிவச்சிருக்காங்கன்னு தெரிஞ்சும் அதை மீட்க ஒரு சின்ன முயற்சிகூட எடுக்க வக்கில்ல....
எல்லா வளங்களும் கொட்டிகிடக்கும் இந்த நாட்டை அன்னியனிடம் கூருபோட்டு வித்துட்டு 5, 10 கமிஷ்னுக்கும் நாக்க தொங்கபோட்டுட்டு நிக்கிறமேன்னு வெட்கமில்ல....
உங்களுக்கு அரிக்குதுன்னா சொறிஞ்சிக்க அப்பாவி விவசாயிதான் கிடைத்தானா?....
ஏற்கனவே விவசாயத்த விட்டுட்டு போயிட்டிருக்கும் விவசாய குடும்பங்களை கையில் காலில் விழுந்தாவது சில நல்ல சலுகைகளை கொடுத்து அவர்களை மீண்டும் விவசாய பணியில் ஈடுபத்த நினைக்காமல்....
அவர்களின் வயிற்றில் அடித்தால்.. இந்த நாடே விரைவில் பஞ்சத்திலும் பசியிலும் அழிந்து போகும்...
அழிந்து போகட்டும்....
நன்றி
விவசாயி மகன்...
துரை.அதிரதன்

No comments:
Post a Comment